Published : 02 Sep 2022 05:10 AM
Last Updated : 02 Sep 2022 05:10 AM

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: கால் இறுதியில் பிரனாய்

ஒசாகா: ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், முன்னாள் உலக சாம்பியனும், தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள சிங்கப்பூரைச் சேர்ந்த லோ கீனை எதிர்த்து விளையாடினார்.

44 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரனாய் 22-20, 21-19 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். கால் இறுதியில் பிரனாய், சீன தைபேவின் சோவ் டியன் செனை எதிர்கொள்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x