Published : 22 May 2016 12:32 PM
Last Updated : 22 May 2016 12:32 PM

ஒலிம்பிக் போட்டி வாய்ப்பை இழந்தார் மேரி கோம்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏற்கெனவே 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் 6-வது முறையாக பட்டம் வெல்வதில் தீவிரமாக இருந்தார்.

மேலும் அவருக்கு இந்தப் போட்டிதான் ஒலிம்பிக் போட்டிக் கான கடைசி தகுதிச்சுற்று போட்டியாகும். இதில் அரையிறுதிக்கு முன்னேறும் பட்சத்தில் மேரி கோம் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெறலாம் என்ற நிலை இருந்தது.

51 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட மேரி கோம் இரண்டாவது சுற்றில் ஜெர்மனி யின் அஸிஸ் நிமானியிடம் 0-2 என தோல்வி அடைந்தார். இத னால் ரியோ ஒலிம்பிக் போட்டி யில் பங்கேற்கும் வாய்ப்பை மேரி கோம் இழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x