Published : 05 May 2016 09:34 AM
Last Updated : 05 May 2016 09:34 AM
மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றுக்கு ரபேல் நடால், ஆன்டி முர்ரே ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் மாட்ரிட் நகரில் நடந்து வருகின்றன. இதில் 2-வது சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ரஷ்யாவின் ஆன்டிரே கஸ்நெட்சோவை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்ற ரபேல் நடால் 3-வது சுற்றுக்கு தகுதிபெற்றார். இப்போட்டி 1 மணிநேரம் 18 நிமிடங்கள் நீடித்தது.
மற்றொரு போட்டியில் இங்கி லாந்தின் ஆன்டி முர்ரே 7-6, 3-6, 6-1 என்ற செட்கணக்கில் ஸ்டெபா னெக்கை போராடி வென்று 3-வது சுற்றுக்கு தகுதிபெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT