Published : 21 May 2022 05:08 AM
Last Updated : 21 May 2022 05:08 AM

தாய்லாந்து பாட்மிண்டன்: அரை இறுதியில் பி.வி.சிந்து

பாங்காக்: தாய்லாந்து பாட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 2-வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்த்து விளையாடினார். முதல் செட்டை சிந்து 21-15 என கைப்பற்றினார். 2-வது செட்டை 22-20 என யமகுச்சி தன்வசப்படுத்தினார்.

வெற்றியை தீர்மானித்த 3-வதுசெட்டில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-13 என கைப்பற்றினார். முடிவில் 51 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-15, 20-22,21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x