Published : 06 Mar 2016 01:04 PM
Last Updated : 06 Mar 2016 01:04 PM
ஆசியக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே அதிக வாய்ப்புள்ளதாக வங்கதேச கேப்டன் மோர்டஸா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ஆசியக் கோப்பையை இந்திய அணியே வெல்வதற்கான வாய்புகள் உள்ளது என எங்கள் அனைவருக்கும் தெரியும். இதுபற்றி எந்த விவாதமும் தேவை இல்லை. தனி ஆளாக ஆட்டத்தை கையில் எடுத்து வெற்றி தேடித்தரும் வகையில் டி 20 போட்டிக்கான நட்சத்திர வீரரை எங்கள் அணி இதுவரை கொண்டிருக்கவில்லை.
ரசிகர்கள், ஆடுகளம், சூழ் நிலை என அனைத்தும் எங்களுக்கு சாதகமாக இருந்தாலும் இறுதிப் போட்டியில் நாங்கள் வெல்வோம் என உறுதியாக கூற முடியாது. இந்திய அணிக்கு இறுதிப்போட்டி என்பது மற்றொரு ஆட்டம் என ரவி சாஸ்திரி கூறியது சரி தான். இந்தியா பெரிய அளவிலான இறுதிப்போட்டிகளில் பங்கேற்று ள்ளது, கோப்பைகளையும் வென் றுள்ளது. ஆனால் எங்களுக்கு இறுதிப்போட்டி என்பது அரிது தான். அவர்கள் எளிதாக எடுத்துக்கொள்ளும் நிலையில் எங்களால் அப்படி முடியாது. ஆட்டத்தில் முழு கவனம் செலுத்த முயற்சி செய்வோம்.
முடிந்த வரை இயல்பாக ஆடுவோம். 2012ம் ஆண்டு இறுதிப் போட்டியை போன்று ஒரு நிலைமை ஏற்பட்டால் நிச்சயம் நாங்கள் சிறப்பாக செயல் படுவோம். டி 20-ல் குறிப்பிட்ட நாளில் எப்படி விளையாடுகிறோம் என்பதை பொறுத்துதான் எல்லாம் அமையும்.
இறுதிப்போட்டியில் நாங்கள் வெற்றி பெறாவிட்டாலும், நாங்கள் எதையும் இழக்கப் போவதில்லை. வங்கதேச கிரிக்கெட்டுக்கு எதிர்கா லம் ஒளிமயமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இவ்வாறு தெரிவித்தார் மோர்டஸா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT