Published : 09 Mar 2016 01:31 PM
Last Updated : 09 Mar 2016 01:31 PM
இந்தியாவின் ஜாக் காலிஸ் ஆக விரும்புவதாக இளம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் இந்திய அணியின் ஊடக சந்திப்பில் அவர் கூறியதாவது, “பெரிய விஷயங்கள் கனவுடன் தான் தொடங்க முடியும். ஆம். நான் ஜாக் காலிஸ் போல் ஆக விரும்புகிறேன். தென் ஆப்பிரிக்காவுக்காக அவர் பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் சாதித்தது போல் நான் நம் அணிக்கு சாதிக்க விரும்புகிறேன்.
பேட்டிங்கிலோ பந்து வீச்சிலோ நான் சுதந்திரமாக முடிவெடுக்க விடப்படுகிறேன், எனக்கு அறிவுரைகள் வழங்கப்படுவதில்லை. இது எனக்கு நன்மை விளைவிப்பதாக அமைந்தது. சர்வதேச ஆட்டத்தின் நெருக்கடிகளை நான் இப்போது ஓரளவுக்கு உணர்ந்திருப்பதால் என்னாலேயே சூழ்நிலை எப்படி என்று தீர்மானிக்க முடிகிறது.
ஐபிஎல் எனது வாழ்க்கையை மாற்றிவிட்டது. கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி என்னை ரூ.10 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது என்ற எனது புகைப்படத்துடனான செய்தி வெளியானது. இந்த ஆண்டு இதே நாளில் ஆசியக் கோப்பை வென்ற அணியில் நான். ஒரே ஆண்டில் இந்தியாவுக்காக ஆடி ஆசியக் கோப்பையையும் வென்ற அணியில் ஒருவனாக இருக்கிறேன்.
பெரிய வீரர்கள் மத்தியில் ஒரு கேப்டன் ஒருவரை ஊக்குவித்து முன்னால் களமிறங்க அனுப்புவது உண்மையில் பெரிய விஷயம். தோனி என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு பெரிதும் ஊக்கமளிக்கிறது. இந்த ஊக்கத்தின் மூலம் முடிந்த அளவில் சிறப்பான பங்களிப்பை அளிப்பேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT