Published : 02 Nov 2015 08:48 AM
Last Updated : 02 Nov 2015 08:48 AM
ஐபிஎல் கிரிக்கெட்டில் அந்நிய செலாவணி விதிமீறல் தொடர்பாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி உள்ளிட்டோருக்கு எதிரான 12 வழக்குகளில் இறுதி நோட்டீஸ் அளிப்பதற்கான பணியில் அமலாக்கப் பிரிவு மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ரூ.1,700 கோடி அளவுக்கு அந்நிய செலாவணி விதிமீறலில் ஈடுபட்டதாக லலித் மோடி உள்ளிட்டோர் மீது ஃபெமா சட்டத்தின் கீழ் 16 வழக்குகளை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது. இதில், 12 வழக்குகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த வழக்குகளில் இறுதி நோட்டீஸ் விரைவில் வழங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருப்புப் பண வழக்கில், லலித் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்படுவதற்காக அமலாக்கத் துறை காத்திருக் கிறது. மேலும், லலித் மோடியை பிரிட்டனில் இருந்து நாடுகடத்தி இந்தியாவுக்குக் கொண்டு வரும்படி உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களுக்கு அமலாக்கத் துறை அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரியில், ஃபெமா சட்டத்தின் கீழ் ரூ.425 கோடி அளவுக்கு விளக்கம் கோரி லலித் மோடி, பிசிசிஐ முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், ஐபிஎல் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப் பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT