Published : 23 Oct 2015 08:56 AM
Last Updated : 23 Oct 2015 08:56 AM

200 ரன்னில் சுருண்டது இலங்கை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று கொழும்பில் தொடங்கியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 66 ஓவரில் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக வர்தனா 68 ரன் எடுத்தார். கருணாரத்னே 13, சில்வா 0, மென்டிஸ் 13, சண்டிமால் 25, மேத்யூஸ் 14, பெரேரா 16, தாமிகா பிரசாத் 7, பிரதீப் 0 ரன்களில் அவுட் ஆனார்கள். மேற்கிந்தியதீவுகள் தரப்பில் வாரிகேன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து ஆடிய மேற்கிந்தியதீவுகள் நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்தது. ஹோப் 4 ரன்னில் அவுட் ஆனார். பரத்வெயிட்டி 4, பிஷூ 5 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x