Published : 23 Oct 2015 08:56 AM
Last Updated : 23 Oct 2015 08:56 AM
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று கொழும்பில் தொடங்கியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 66 ஓவரில் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக வர்தனா 68 ரன் எடுத்தார். கருணாரத்னே 13, சில்வா 0, மென்டிஸ் 13, சண்டிமால் 25, மேத்யூஸ் 14, பெரேரா 16, தாமிகா பிரசாத் 7, பிரதீப் 0 ரன்களில் அவுட் ஆனார்கள். மேற்கிந்தியதீவுகள் தரப்பில் வாரிகேன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து ஆடிய மேற்கிந்தியதீவுகள் நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்தது. ஹோப் 4 ரன்னில் அவுட் ஆனார். பரத்வெயிட்டி 4, பிஷூ 5 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT