Published : 12 Oct 2015 10:25 AM
Last Updated : 12 Oct 2015 10:25 AM
இந்தியா - நியூஸிலாந்து அணிகளி டையே நேற்று நடந்த ஹாக்கி போட்டி 1-1 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிந்தது.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக 4 போட்டிகளைக் கொண்ட ஹாக்கி டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடியது. இதில் கடைசிப் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் நேற்று நடைபெற்றது. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இந்திய அணி, நியூஸிலாந்து மீது ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் நியூஸிலாந்து வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டதால் இந்தியாவால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதியில் இரண்டு கால் ஆட்டங் களிலும் இரு அணிகளும் கோல் எதையும் அடிக்கவில்லை. மூன்றாவது கால் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி தாக்குதல் ஆட்டத்தை தொடங்கியது.
ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் இந்திய வீரர்களின் பாதுகாப்பு அரணை உடைத்து முன்னேறிய நியூஸிலாந்து வீரர் நிக் ரோஸ் ஒரு கோல் அடித்து அந்த அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால் நியூஸிலாந்து அணியின் மகிழ்ச்சி சில நிமிடங்கள்கூட நீடிக்கவில்லை. 43-வது நிமிடத்தில் இந்தியாவின் எஸ்.வி.சுனில் கோல் அடித்து இந்தியாவுக்கு சமநிலை பெற்றுத் தந்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்கா ததால் 1 - 1 என்ற கோல்கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
இந்த போட்டி டிராவில் முடிந்ததைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT