Published : 06 Oct 2015 10:14 AM
Last Updated : 06 Oct 2015 10:14 AM
இந்தியன் பிரிமியர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டிகள் கடந்த 3ம் தேதி சென்னை நேரு விளையாட்டரங்கில் கோலாகலமாக தொடங்கியது.
தொடக்க விழா வில் ஐஎஸ்எல் சேர்மன் நீதா அம்பானி, தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், அபிஷேக் பச்சன் அர்ஜூன்கபூர், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், அலியா பட், கேரள பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சச்சின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவின் போது சச்சினைக் கட்டிப்பிடித்து ரஜினிகாந்த் மகிழ்ச் சியை வெளிப்படுத்தினார். மேலும் இருவரும் சேர்ந்து மைதானத்தை காரில் வலம் வந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிலையில் இந்த நிகழ்வை சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், "ஐஎஸ்எல் கால்பந்து தொடக்க விழாவில் ரஜினிகாந்த் அவர்களின் உற்சாகம் அனைவரை யும் தொற்றிக் கொண்டது. இத் தொடரில் விளையாடும் அனைத்து அணியினருக்கும் எனது வாழ்த் துக்கள்" என தெரிவித் துள்ளார்.
ஐஎஸ்எல் தொடரின் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங் களில் வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT