Published : 09 Sep 2015 07:29 PM
Last Updated : 09 Sep 2015 07:29 PM
இம்மாதம் வங்கதேச ஏ அணிக்கு எதிராக நடைபெறும் 3 நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏ அணியின் தலைவராக ஷிகர் தவண் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக சமீபத்திய வெற்றித் தொடரில் முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு காயம் காரணமாக ஷிகர் தவண் விளையாடவில்லை.
உமேஷ் யாதவ்விடம் டெஸ்ட் இடத்தை இழந்த வருண் ஆரோன் இந்த 3 நாள் போட்டிக்காக இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் 3 நாள் போட்டியில் ஆச்சரியகரமாக இடம்பிடித்த மற்றொரு வீரர் ரவீந்திர ஜடேஜா என்பது குறிப்பிடத்தக்கது.
ஜடேஜா இதில் சிறப்பாக ஆடினால், ஹர்பஜன் இடத்தை இந்திய டெஸ்ட் அணியில் பெறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அதே போல் இந்தியா ஏ ஒருநாள் அணியின் கேப்டன் பதவியை உன்முக்த் சந்த் தக்கவைத்துள்ளார். சுரேஷ் ரெய்னா இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்தியா ஏ அணி (3 நாள் போட்டி) : ஷிகர் தவண் (கேப்டன்), அபிநவ் முகுந்த், கருண் நாயர், ஷ்ரேயஸ் ஐயர், பாபா அபராஜித், நமன் ஓஜா, ஜயந்த் யாதவ், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ஷ்ரேயஸ் கோபால், அபிமன்யு மிதுன், வருண் ஆரோன், ஈஷ்வர் பாண்டே, ஷெல்டன் ஜாக்சன்.
ஒருநாள் போட்டி அணி: உன்முக்த் சந்த் (கேப்டன்), மயங்க் அகர்வால், மணிஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், சஞ்சு சாம்சன், கருண் நாயர், குல்தீப் யாதவ், ஜயந்த் யாதவ், கரண் சர்மா, ரிஷி தவண், எஸ்.அரவிந்த், தவல் குல்கர்னி, ரஷ் கலாரியா, குர்கீரத் சிங் மான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT