Last Updated : 11 Aug, 2015 11:13 AM

 

Published : 11 Aug 2015 11:13 AM
Last Updated : 11 Aug 2015 11:13 AM

உலக பாட்மிண்டன் 2-வது சுற்றில் காஷ்யப், பிரணாய்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் காஷ்யப், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் காஷ்யப் தனது முதல் சுற்றில் 21-17, 21-10 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் எரிக் மெய்ஸை தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் காஷ்யப், அடுத்த சுற்றில் வியட்நாமின் டியென் மின்னை சந்திக்கிறார்.

மற்றொரு முதல் சுற்றில் எச்.எஸ்.பிரணாய் 21-12, 21-16 என்ற நேர் செட்களில் பிரேசிலின் அலெக்ஸ் யுவானைத் தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் பிரணாய், அடுத்ததாக உகாண்டாவின் எட்வின் எகிரிங்கை சந்திக்கிறார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அருண் விஷ்ணு-அபர்ணா பாலன் ஜோடி 18-21, 21-10, 22-24 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் ஈவ்ஜெனி டிரெமின்-ஈவ்ஜெனியா டிமோவா ஜோடியிடம் தோல்வி கண்டது. இதேபிரிவில் மற்றொரு இந்திய ஜோடியான தருண் கோனா-சிக்கி ரெட்டி ஜோடி 13-21, 17-21 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் லியாவ் மின்-சென் ஹுவான் ஜோடியிடம் தோல்வி கண்டது.

இந்தியாவின் முதல் நிலை வீராங்கனையான சாய்னா நெவால், பி.வி.சிந்து, இந்தியாவின் முதல் நிலை வீரரான ஸ்ரீகாந்த் ஆகியோர் இன்று களமிறங்குகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x