Published : 21 Aug 2015 03:21 PM
Last Updated : 21 Aug 2015 03:21 PM
தனது கடைசி டெஸ்ட் போட்டியை ஆடும் சங்ககாரா இன்று பேட்டிங்கிற்காக களமிறங்கியபோது ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் இலங்கை வீரர்கள் அனைவரும் கரகோஷம் செய்தனர்.
களத்துக்குள் இறங்கி பிட்ச் அருகே வரும் போது இந்திய வீரர்கள் வரிசையாக நின்று சங்ககாராவுக்கு கரகோஷ மரியாதை செய்தனர்.
திமுத் கருணரத்னே, உமேஷ் யாதவ் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறிய பிறகு சங்ககாரா களமிறங்கினார்.
அப்போது பிட்ச் நோக்கி வரும்போது இந்திய வீர்ர்கள் அனைவரும் வரிசையாக நின்று கரகோஷ மரியாதை செய்தனர், கிரீஸிற்குச் சென்று கார்டு எடுக்கும் முன் விராட் கோலியுடன் கைகுலுக்கினார் சங்ககாரா.
இந்நிலையில் சற்று முன் அவர் 32 ரன்களில் மீண்டும் ஒரு முறை அஸ்வினிடம் சிக்கினார், பந்து திரும்ப சங்ககாரா மட்டை விளிம்பில் பட்டு ரஹானே பாய்ந்து பிடித்தார். 87 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 32 ரன்களை எடுத்தார் சங்ககாரா.
தற்போது இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது, சில்வா 41, திரிமானே 0, களத்தில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT