Published : 03 Mar 2020 02:48 PM
Last Updated : 03 Mar 2020 02:48 PM

இலங்கை வீரர்களுடன் கைகுலுக்கப் போவதில்லை: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் திடீர் முடிவு

இலங்கை வீரர்களுடன் இங்கிலாந்து வீரர்கள் கைகுலுக்கப் போவதில்லை என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் திடீரென முடிவெடுத்தது பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம்.

ஆனால் அவர் கூறும் காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது, அதுதான் கரோனா வைரஸ் அச்சுறுத்தல். தொடாமல் ஒருவரையொருவர் வாழ்த்துவது பாராட்டுவது தொடரும் என்கிறார் ஜோ ரூட்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது இங்கிலாந்து. அதற்கான பயணத்துக்கு முன்புதான் ஜோ ரூட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“தென் ஆப்பிரிக்கா பயணத்தின் போது இங்கிலாந்து வீரர்களுக்கு ஃப்ளூ காய்ச்சல் ஏற்பட்டது, அதோடு உணவுக்குழல் பிரச்சினைகளும் ஏற்பட்டது. எனவே இலங்கை தொடரின் போது உடல் ரீதியான தொடர்பு மட்டுப்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். எங்கள் மருத்துவக் குழு நல்லதொரு அறிவுரையை வழங்கியுள்ளனர்.

எனவே கைகுலுக்கல்களை தவிர்க்க முடிவெடுத்தோம்” என்றார் ஜோ ரூட்.

கடந்த முறை இலங்கைக்கு 3-0 தோல்வியை இங்கிலாந்து பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x