Published : 19 Feb 2020 07:44 PM
Last Updated : 19 Feb 2020 07:44 PM
ஆசியக் கோப்பை டி20 தொடரை நடத்துவதைப் பாகிஸ்தான் கைவிடுவதற்கான வாய்ப்பே அதிகம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஷான் மானி தெரிவித்துள்ளார்.
“அசோசியேட் உறுப்பினர்களின் வருவாயை உறுதி செய்ய வேண்டியுள்ளது. முழு உறுப்பினர்கள் பற்றியதல்ல இது, அசோசியேட் உறுப்பினர்கள் பற்றியது. ஆசியக்கோப்பை மைதானங்கள் பற்றி இது தொடர்பாக அனைவரிடமும் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுப்போம்
முழுத் தொடரையும் பாகிஸ்தானில் நடத்த முடியவில்லை என்றால் பாகிஸ்தான் போட்டித் தொடரை நடத்துவதைக் கைவிடவே செய்யும்” என்றார்.
பிசிபியின் தலைமைச் செயலதிகாரி வாசிம் கானும் இதையே தெரிவித்தார்.
இந்திய அணி பாகிஸ்தான் சென்று ஆட மறுத்து தங்கள் போட்டிகளை நடுநிலை மைதானங்களில் விளையாடுகிறோம் என்று கூறியதையடுத்து இஷான் மானி இவ்வாறு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT