Published : 08 Feb 2020 02:59 PM
Last Updated : 08 Feb 2020 02:59 PM
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எல்லிஸ் பெர்ரியின் சவாலை ஏற்று, ஒரே ஒரு ஓவர் மட்டுமே ஆட உள்ளார்.
ஆஸ்திரேலிய காட்டுத் தீ பாதிப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக, மெல்போர்னில் நாளை காட்சி கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறுகிறது.
இதில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு பயிற்சியாளர் சச்சின் டெண்டுல்கர். இந்நிலையில், இந்த போட்டிக்கு நடுவே, டெண்டுல்கர் ஒரே ஒரு ஓவரை எதிர்கொள்ள தயாரா என்று ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் எல்லிஸ் பெர்ரி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ள டெண்டுல்கர், தோள்பட்டை காயம் காரணமாக பேட்டிங்கில் ஈடுபடக் கூடாது என மருத்துவர்கள் கூறியுள்ளபோதிலும், ஒரே ஒரு ஓவர் மட்டும் பேட்டிங் செய்ய தயார் என பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரண நிதிப் போட்டியில் இடைவேளையின் போது எல்லிஸ் பெர்ரியின் ஒரு ஓவரை சச்சின் டெண்டுல்கர் எதிர்கொள்ள முடிவு செய்துள்ளார்.
அப்போது ஆஸ்திரேலிய வீராங்கனைகள் 10 பேர் களத்தில் பீல்டிங்கில் ஈடுபடவுள்ளனர்.
2019-ம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீரராகத் தேர்வு செய்யப்பட்ட பெர்ரி, சமூகவலைத்தளத்தில் சச்சினுக்கு சவால் விடுத்தார்.
இந்த ஒற்றைக்கு ஒற்றை போட்டி மூலம் இன்னும் கூடுதல் நிதி திரட்ட முடியும் என்று பெர்ரி கூற அதற்கு சச்சின் டெண்டுல்கர், “அருமையான விஷயம் பெர்ரி, களத்தில் இறங்கி ஒரு ஓவர் ஆட விரும்புகிறேன். கூடுதல் பணம் திரட்ட முடியும் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT