Published : 16 Jan 2020 06:22 PM
Last Updated : 16 Jan 2020 06:22 PM
பிசிசிஐ மைய வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட ஸ்டார் பிளேயர் எம்.எஸ்.தோனி ஜார்கண்ட் ரஞ்சி அணியுடன் இன்று பயிற்சியில் இறங்கினார்.
38 வயதான தோனி தன் உள்நாட்டு மாநில அணியான ஜார்கண்ட் அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார், இது ஜார்கண்ட் வீரர்களையும் நிர்வாகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது..
ஜார்கண்ட் அணி நிர்வாகத்திற்கு நெருக்கமான ஒருவர் கூறும்போது, “தோனி வருவார் என்பது எங்களுக்கே தெரியாது. அது ஒரு சந்தோஷ அதிர்ச்சி. சிறிது நேரம் பேட் செய்தார் பிறகு வழக்கமான பயிற்சிகளை மேற்கொண்டார்” என்று பிடிஐ-யிடம் தெரிவித்தார்,
ஜார்கண்டின் அடுத்த போட்டி உத்தராகண்ட் அணிக்கு எதிரானததாகும், இது ஞாயிறன்று ராஞ்சியில் தொடங்குகிறது. தோனி உலகக்கோப்பை அரையிறுதிக்குப் பிறகு எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை.
ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு வந்த பிறகு உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டுக்கு வருவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்தம் அவருக்கு கிடைக்கவில்லை, ஆனால் ஒப்பந்தத்திற்கும் அணியில் தேர்வு செய்யப்படுவதற்கும் ஒரு தொடர்பும் இல்லை, என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT