Published : 16 Jan 2020 05:16 PM
Last Updated : 16 Jan 2020 05:16 PM

வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து நீக்கம்: ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #ThankYouDhoni

பிசிசிஐ-யின் கடந்த ஆண்டு வீரர்கள் ஒப்பந்தத்தில் கிரேட் ஏ-வில் இருந்த முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, இந்த முறை பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. இதனையடுத்து ட்விட்டரில் தேங்க்யூ தோனி என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தோனியின் பெயர் இல்லாததோடு ராயுடு, தினேஷ் கார்த்திக், கலீல் அகமெட் பெயர்களும் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் எந்த ஒரு கிரேடிலும் தோனி இடம்பெறாததையடுத்து ட்விட்டர்வாசிகள் தேங்க்யூ தோனி என்ற ஹாஷ்டேக்கை பிரபலப்படுத்தி வருகின்றனர்.

அதாவது ஒரு காலக்கட்டம், ஒரு யுகம் முடிந்து விட்டது, தோனி யுகம் முடிந்தது என்று அவரது தீவிர ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

ஆனால் மைய ஒப்பந்தத்தில் இடம்பெறுவதற்கும் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, ஒப்பந்தப் பட்டியலில் இல்லாமலேயே அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உண்டு.

இந்நிலையில் ட்விட்டர்வாசிகள் தோனிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்து வருகின்றனர். ஒரு கடைசி பிரியாவிடை போட்டியை அவருக்குக் கொடுங்கள் என்று பிசிசிஐக்கு அவர்கள் ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சிலர் ‘சொந்த சாதனைகளைப் பின்னுக்குத் தள்ளி அணியை முன்னிறுத்தியவர்’என்றும் சில ரசிகர்கள் ஏதோ தோனி ஓய்வு பெற்றுவிட்டதைப் போல் ட்வீட் செய்து வருகின்றனர்.

விரைவில் ஒருநாள் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு அறிவிப்பார் என்றார் ரவிசாஸ்திரி. இப்படிப் பார்க்கையில் டி20 கிரிக்கெட்டில் ஆடுவார் என்றுதான் தெரிகிறது. அதற்குள் ரசிகர்கள் அவருக்குப் பிரியாவிடை அளித்துக் கொண்டிருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x