Published : 12 Jan 2020 01:25 PM
Last Updated : 12 Jan 2020 01:25 PM
முரட்டு பார்மில் இருக்கும் இந்திய அணி ஒவ்வொரு அணியாக இங்கு அழைத்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. இந்திய டாப் ஆர்டர் ரோஹித் சர்மா, ராகுல், கோலி, அய்யர் கூட்டணி வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில் உலகக்கோப்பை டி20 தொடரில், அதற்கு முந்தைய நியூஸி தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் ரோஹித் சர்மா வந்து விட்டால் ஷிகர் தவண் பெஞ்சில் அமர வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் ஷிகர் தவண் கூறியதாவது:
3 வீரர்களும் டாப் ஆர்டரில் பிரமாதமாக ஆடி வருகின்றனர். ரோஹித்துக்கு 2019 சிறப்பாக அமைந்தது. கடந்த 2-3 மாதங்களாக ராகுலும் நன்றாக ஆடுகிறார், அவர் ஒரு அருமையான ஆட்டக்காரர். இப்போது எனக்குக் கிடைத்த வாய்ப்பையும் நான் நன்றாகப் பயன்படுத்தியுள்ளதாகவே கருதுகிறேன்.
எனவே நான் இருப்பேனா அல்லது இல்லையா என்பதெல்லாம் என் தலைவலி அல்ல. அது என் கையில் இல்லை என்பதால் அதை யோசிப்பதில்லை. 2 வாய்ப்புகள் கிடைத்தது அதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT