Published : 09 Jan 2020 08:12 AM
Last Updated : 09 Jan 2020 08:12 AM

மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் சிந்து, சாய்னா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்:  சாய் பிரணீத், ஸ்ரீகாந்த் வெளியேற்றம்

மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். அதே வேளையில் ஆடவர் பிரிவில் சாய் பிரணீத், கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தனர்.

கோலாலம்பூர் நகரில் நடை பெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத் 11-21, 15-21 என்ற நேர் செட்டில் டென்மார்க்கின் ராஸ் மஸ் ஜெம்கேவிடம் தோல்வி யடைந்தார். இதேபோன்று கிடாம்பி ஸ்ரீகாந்த் 17-21, 5-21 என்ற நேர் செட்டில் 2-ம் நிலை வீரரான சீன தைபேவின் டியன் செனிடமும் பாருபள்ளி காஷ்யப் 17-21, 16-21 என்ற நேர் செட்டில் முதல் நிலை வீரரான ஜப்பானின் கென்டோ மோமோடாவிடமும் வீழ்ந்தனர்.

அதேவேளையில் மற்ற இந்திய வீரர்களான ஹெச்.எஸ்.பிரனோய் 21-9, 21-17 என்ற நேர் செட்டில் ஜப்பானின் கன்டா சுனேயாமாவையும், சமீர் வர்மா 21-16, 21-15 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் வாங்சரோனையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் 6-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, 27-ம் நிலை வீராங்கனையான ரஷ்யா வின் எவ்ஜெனியா கோசெட்ஸ்கா யாவை எதிர்த்து விளையாடினார். 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றில் நுழைந்தார் சிந்து. மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நெவால் 21-15, 21-17 என்ற நேர் செட்டில் பெல்ஜியத்தின் லியானே டானை வீழ்த்தி 2-வது சுற்றில் கால்பதித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x