Last Updated : 16 Dec, 2019 09:57 PM

 

Published : 16 Dec 2019 09:57 PM
Last Updated : 16 Dec 2019 09:57 PM

மே.இ.தீவுகள் அணிக்கு ஊதியத்தில் 80 சதவீதம் அபராதம் : ஐசிசி அதிரடி உத்தரவு

படம் உதவி ட்விட்டர்

சென்னை

கேப்டன் பொலார்ட் தலைமையிலான மேற்கி்ந்தியத்தீவுகள் அணிக்கு 80 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது

சென்னையில் நேற்று இந்தியா, மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் ஆட்டம் நடந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட்டில் வீழ்த்தியது மே.இ.தீவுகள் அணி.

இந்த போட்டியில் முதலில் பந்துவீசிய மேற்கிந்தியத்தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பந்துவீசாமல் அதிகமான நேரம் எடுத்துக்கொண்டது.

குறிப்பாக கடைசி 4 ஓவர்களை வீசுவதற்கு அதிகமான நேரத்தை மே.இ.தீவுகள் அணி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பந்துவீசாத மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில் " ஐசிசியின் விளையாட்டு வீரர்களுக்கான விதிமுறைகள் படி, போட்டியில் பந்துவீச நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பந்துவீசாமல் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டால் குறைந்தபட்சம் 20 சதவீதம் வீரர்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும். ஆனால், மே.இ.தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் கூடுதலான நேரத்தை எடுத்து 4 ஓவர்கள் வரை வீசியுள்ளனர்.ஆதலால், 80 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக கேப்டன் பொலார்ட்டிடம் எந்தவிதமான முறையான விசாரணையும் நடத்தப்படவில்லை. போட்டி முடிந்தபின் தங்கள் மீதான அபராதம் விதிப்புக்கு மே.இ.தீவுகள் கேப்டன் பொலாரட் சம்மதம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x