Published : 09 Dec 2019 12:10 PM
Last Updated : 09 Dec 2019 12:10 PM
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பயணம் மேற்கொள்கிறது, அப்போது 2 டெஸ்ட் போட்டிகளை பகலிரவு போட்டிகளாக, பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகளாக ஆட வேண்டும் என்று ஆஸ்திரேலியா வைத்த கோரிக்கையை கங்குலி மறுத்துள்ளார்.
அதாவது இரண்டு பகலிரவு டெஸ்ட் போட்டிகள் ‘டூ மச்’ என்று கங்குலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா விளையாடிய பகலிரவு டெஸ்ட் போட்டியின் பின்னணியில் கிரியா ஊக்கியாக திகழ்ந்தவர் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிதான்.
இந்நிலையில் இந்தியா டுடே சந்திப்பில் கங்குலி கூறும்போது, “ஆஸ்திரேலியாவில் 2 பகலிரவு போட்டிகளை இந்தியா ஆடுமா என்பது உறுதி செய்ய முடியாத ஒன்று. 4 டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்தில் 2 டெஸ்ட் போட்டிகள் கொஞ்சம் டூ மச் தான்.
அதைப் பற்றி மெதுவே யோசிப்போம், நான் செய்தித்தாள்களின் மூலம்தான் இந்தச் செய்தியை அறிந்தேன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடமிருந்து இது தொடர்பாக எதுவும் இதுவரை வரவில்லை. வரட்டும்.. வந்தால் பார்க்கலாம்” என்றார் கங்குலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT