Published : 09 Sep 2019 02:35 PM
Last Updated : 09 Sep 2019 02:35 PM
ஒருநாள் போட்டிகளிலிருந்து திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டு பிறகு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓரங்கட்டப்பட்டு வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னமும் கூட இந்தியாவின் சிறந்த ஸ்பின்னர்தான் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் நெக்ஸ்ட்.காம் நேர்காணலில் அனில் கும்ப்ளே கூறியதாவது:
அஸ்வின் இன்னும் இந்தியாவின் சிறந்த ஸ்பின்னர்தான். ஆம். சில சந்தர்ப்பங்களில் அவர் காயமடைந்ததால் அவரிடம் உள்ள திறமைக்கேற்ப அவரால் சரிவர ஆட முடியவில்லை. ஆனால் அஸ்வின் தான் நம் நம்பர் 1 ஸ்பின்னர். அவர் அணியில் இடம்பெற வேண்டும், விளையாடும் லெவனிலும் இருக்க வேண்டும். அவரை எப்படியாவது உள்ளே கொண்டு வருவது அவசியம்.
அணியில் 2 ஸ்பின்னர்களுக்கு இடம் இருக்கிறது என்றே நான் பலமாக நம்புகிறேன். ஏனெனில் அஸ்வின், ஜடேஜா இருவருமே நல்ல பேட்ஸ்மென்கள். 3 வேகப்பந்து வீச்சாளர்கள் 2 ஸ்பின்னர்கள் அணிச்சேர்க்கை இருக்குமானால் நிச்சயமாக அஸ்வின், ஜடேஜா இருவரும் பேட்டிங்கிலும் கைகொடுப்பார்கள் என்பது கூடுதல் பலமே.
எனவே விளையாடும் லெவனில் அஸ்வின் இடம்பெற வேண்டும் என்பதே என் வாதம். அஸ்வின் போன்ற திறமை உள்ள வீரர் ஒருவர் விளையாடாமல் டெஸ்ட் போட்டியிலிருந்து உட்கார வைக்கப்படுவது எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது.
இவ்வாறு கூறினார் அஸ்வின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT