Published : 20 Aug 2019 08:13 PM
Last Updated : 20 Aug 2019 08:13 PM

விராட் கோலி கேப்டன்சியில் ஆட வேண்டும், 100 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுக்க வேண்டும்: ஸ்ரீசாந்த் விருப்பம் 

கொச்சி, பிடிஐ

கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த் மீதான தடை 7 ஆண்டுகளாக முன் தேதியிட்டு குறைக்கப்பட்டதையடுத்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதோடு தனது விருப்பத்தையும் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:

இந்த விஷயம் எனக்கு பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது. எனது நலம் விரும்பிகள், எனக்காக பிரார்த்தனை செய்தோருக்கு நன்றிகள். எனக்கு வயது 36, தடை முடியும் போது 37 ஆகும்.

நான் 87 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன், 100 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பது என் விருப்பம். இந்திய டெஸ்ட் அணிக்கு நான் திரும்ப முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. விராட் கோலி கேப்டன்சியின் கீழ் ஆட வேண்டும் என்பது எப்போதுமே என் ஆசையாக இருந்து வந்துள்ளது

இவ்வாறு கூறினார் ஸ்ரீசாந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x