Published : 11 Aug 2019 09:08 AM
Last Updated : 11 Aug 2019 09:08 AM

வீல்சேர் டென்னிஸ் போட்டி: தமிழகத்தின் கார்த்திக் சாம்பியன்

சென்னை

மெரினா ஓவன் வீல்சேர் டென்னிஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திக் சாம்பியன் பட்டம் வென்றார்.

3-வது மெரினா ஓபன் வீல்சேர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் கே.கார்த்திக் 2-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் சக மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.பாலசந்தரை வீழ்த்தி பட்டம் வென்றார். வெற்றி பெற்ற கார்த்திக் ரூ.30 ஆயிரம் பரிசுத் தொகையையும், ஆல் இந்தியா டென்னிஸ் சங்கத்தின் 30 புள்ளி களையும் பெற்றார். 2-வது இடம் பிடித்த பாலசந்தர் ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் 22 புள்ளி கள் பெற்றார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் கர்நாடகத்தின் பிரதிமா ராவ் 7-5, 6-1 என்ற நேர் செட்டில் சகமாநிலத்தைச் சேர்ந்த ஷில் பாவை தோற்கடித்து சாம்பியன் ஆனார். பிரதிமா ராவுக்கு ரூ.13 ஆயிரம் பரிசுத் தொகையும் 15 புள்ளிகளும் வழங்கப்பட்டன. ஷில் பாவுக்கு ரூ.6 ஆயிரம் பரிசுத் தொகையும் 12 புள்ளிகளும் கிடைத்தன.

ஆடவர் இரட்டையர் பிரிவில் கர்நாடகாவின் சேகர் வீராசாமி, தமிழகத்தின் எஸ்.பாலசந்தர் ஜோடி 3-6, 6-3, 10-5 என்ற செட் கணக்கில் தமிழகத்தின் கே.கார்த் திக், டி.மாரியப்பன் ஜோடியை வீழ்த்தி கோப்பை வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x