Published : 24 Jun 2015 09:45 AM
Last Updated : 24 Jun 2015 09:45 AM
கனடாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஒட்டாவா நகரில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இங்கிலாந்தும், நார்வேயும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டநேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் நார்வேயின் குல்பிரான்ஸென் தலையால் முட்டி கோலடிக்க அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
எனினும் இந்த முன்னிலை 7 நிமிடங்களே நீடித்தது. 61-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஹக்டன் கோலடிக்க, ஸ்கோர் சமநிலையை எட்டியது.
இதன்பிறகு ஆட்டம் விறுவிறுப்பாக செல்ல, 76-வது நிமிடத்தில் கோலடித்த இங்கிலாந்தின் லூஸி பிரான்ஸ், நார்வேயிடம் இருந்து வெற்றியைப் பறித்தார். இறுதியில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. வரும் 27-ம் தேதி நடைபெறும் காலிறுதியில் கனடாவை சந்திக்கிறது இங்கிலாந்து.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT