Last Updated : 14 May, 2015 09:54 AM

 

Published : 14 May 2015 09:54 AM
Last Updated : 14 May 2015 09:54 AM

ஐபிஎல்லில் களமிறங்கும் பீட்டர்சன்

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன் ஐபிஎல் போட்டியில் களமிறங்குகிறார். அவர் வரும் வெள்ளிக்கிழமை சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இணையவுள்ளதாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சீசனில் சன்ரைஸர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த பீட்டர்சன், இங்கிலாந்து அணியில் இடம்பிடிப்பதற்காக ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் கவுன்டி போட்டியில் விளையாடி வந்தார்.

ஆனால் அங்கு முச்சதம் அடித்தபோதும், பீட்டர்சனுக்கு இடம் இல்லை என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய இயக்குநரான ஆண்ட்ரூ ஸ்டிராஸ் தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து இனி இங்கிலாந்து அணிக்காக ஆட முடியாது என்பதை உணர்ந்த பீட்டர்சன், ஐபிஎல் போட்டிக்கு திரும்பியுள்ளார். 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ள சன்ரைஸர்ஸ் அணிக்கு பீட்டர்சனின் வருகை மிகப்பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x