Last Updated : 09 Apr, 2015 09:52 AM

 

Published : 09 Apr 2015 09:52 AM
Last Updated : 09 Apr 2015 09:52 AM

சிங்கப்பூர் ஓபன்: 2-வது சுற்றில் காஷ்யப், பிரணாய்

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காஷ்யப், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற முதல் சுற்றில் காஷ்யப் 21-11, 21-13 என்ற நேர் செட்களில் கொரியாவின் லீ யூனைத் தோற்கடித்தார். அடுத்த சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் தென் கொரியாவின் சன் வான் ஹோவை சந்திக்கிறார் காஷ்யப்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் எச்.எஸ். பிரணாய் 21-15, 21-17 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் வாங் விங் கி வின்சென்டை தோற்கடித்தார். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 21-12, 21-16 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் கோ ஆ ரா-யோ ஹே வோன் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னறியது.

அதேநேரத்தில் இந்தியாவின் குருசாய் தத், பி.சி.துளசி ஆகியோர் தங்களின் முதல் சுற்றுகளில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர். தென் கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்கொண்ட குருசாய் தத், முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் கைப்பற்றியபோதும், அடுத்த இரு செட்களை 12-21, 15-21 என்ற கணக்கில் இழந்து தோல்வியைத் தழுவினார். துளசி 16-21, 14-21 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் லின் கேர்ஸ்பெல்ட்டிடம் தோல்வி கண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x