Published : 06 Mar 2015 11:02 AM
Last Updated : 06 Mar 2015 11:02 AM

புகையிலைக்கு எதிராக ஒரு பயணம்

பெண் இன்று பகுதியில் வெளியான ‘புகையிலைக்கு எதிராக ஒரு பயணம்‘ கட்டுரை சிறப்பாக இருந்தது. மது, புகையிலை பழக்கத்தால் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது பற்றி எத்தனையோ செய்திகள் வெளியாகின்றன.

ஆனால் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் புகையிலையின் பிடியில் மனிதர்கள் சிக்கிக்கொள்வது வியப்பளிக்கிறது. தங்கள் உடல்நலம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் தங்களைச் சுற்றியிருப்பவர்களின் நிம்மதி குலைந்துபோவதை அவர்கள் எப்படி கவனிக்கத் தவறுகிறார்கள்?

கிராமங்களுக்குச் சென்று அங்கிருக்கும் மக்களைச் சந்தித்து, புகையிலைப் பழக்கத்தின் தீமைகளை எடுத்துரைத்து, ஒவ்வொருவராக மீட்டுவரும் டாக்டர் கீதா பாராட்டுக்குரியவர்.

- ம. மீனாட்சிசுந்தரம்,மின்னஞ்சல் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x