Published : 09 Mar 2015 09:40 AM
Last Updated : 09 Mar 2015 09:40 AM
பிரதமர் மோடி இலங்கை செல்வதால், இருநாடுகளுக்கு இடையே நல்லுறவு மேம்படும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சி தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு நடத்தி வரும் மதுக்கடைகளுக்கு பதிலாக மலிவு விலை புத்தகக் கடை போன்றவைகளை நடத்த முன்வர வேண்டும். அடுத்த மகளிர் தினத்திற்குள் தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூட தமிழக அரசும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய பிரதமர் ஒருவர், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளது, வரலாற்று சிறப்புக்குரியது. இதனால், அங்குள்ள தமிழர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். பிரதமர் மோடியின் பயணம் இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும். இருதரப்பு உறவை புதிய உச்சத்துக்கு எடுத்துச்செல்லும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT