Published : 24 Mar 2015 09:44 AM
Last Updated : 24 Mar 2015 09:44 AM

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது - டிவில்லியர்ஸ் சூளுரை

நாங்கள் எங்கள் முழுத்திறமையையும் வெளிப் படுத்தி விளையாடும்பட்சத்தில் யாராலும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது என தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த முறை உலகக் கோப்பையை நாங்கள்தான் வெல்வோம் என மிகுந்த துணிச்சலோடும், நம்பிக் கையோடும் பேசிய அவர், மேலும் கூறியதாவது: நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறோம். எங்கள் அணி சரியான நேரத்தில் நன்றாக விளையாடி வருவதாக உணர்கிறேன். நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

நாங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி விளையாடும் பட்சத்தில் எங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார். இதற்கு முன்னர் உலகக் கோப்பையில் நியூஸிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் 6 முறை மோதியுள்ளன. ஆனால் அதில் இரு முறை மட்டுமே தென் ஆப்பிரிக்கா வெற்றி கண்டுள்ளது.

அதுபற்றி பேசிய டிவில்லியர்ஸ், “கடந்த கால வெற்றி, தோல்விகளில் அதிக கவனம் செலுத்த விரும்பவில்லை. நாங்கள் நன்றாக ஆடிவிட்டால் எங்களால் வெற்றி பெற முடியும் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் எங்களின் திறமை மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம். இன்றையஆட்டத்தில் விளையாடுவதற்கு மிகுந்த புத்துணர்ச்சியோடும், மகிழ்ச்சியோடும் இருக்கி றோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x