Last Updated : 09 Feb, 2015 10:15 AM

 

Published : 09 Feb 2015 10:15 AM
Last Updated : 09 Feb 2015 10:15 AM

மார்ச் 2-ல் பிசிசிஐ தேர்தல்

இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) நிர்வாகிகள் தேர்தல் வரும் மார்ச் 2-ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் வருடாந்திர பொதுக்குழு கூட்டமும் நடைபெறவுள்ளது.

வரும் மார்ச் 5-ம் தேதிக்குள் பிசிசிஐ-யின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி 22-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

அதுதொடர்பாக முடிவு செய்யவும், வருடாந்திர பொதுக்குழுவைக் கூட்டுவது குறித்தும் சென்னையில் பிசிசிஐ செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் சஞ்சய் படேல் வெளியிட்டுள்ள அறிக்கை:

உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த பிசிசிஐ செயற்குழு வில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை 50 சதவீதம் உயர்த்தி வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த உயர்வு கடந்த ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது. இவ் வாறு அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x