Published : 10 Jan 2015 12:50 PM
Last Updated : 10 Jan 2015 12:50 PM

சென்னை ஓபன் அரையிறுதியில் ராபர்ட்டோ, அல்ஜாஸ்

சென்னையில் நடைபெற்று வரும் ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் விளையாட ஸ்பெயின் வீரர் ராபர்ட்டோ பவுடிஸ்டா, ஸ்லோவேனியா வீரர் அல்ஜாஸ் பெட்டினி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சீன தைபெயின் யென் சூன் லூவை, ராபர்ட்டோ எதிர்கொண்டார். இதில் 7-6 , 6-4 என்ற செட் கணக்கில் ராபர்ட்டோ வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் குலிர்மோ லோபஸ், ஸ்லோவேனியாவின் அல்ஜாஸ் பெட்டினி ஆகியோர் பலப் பரீட்சை நடத்தினர். இதில் குலிர்மோ 6-2 என்ற செட் கணக்கில் முதல் செட்டை வென்றார். எனினும் அடுத்த இரு செட்களிலும் சிறப்பாக விளையாடிய அல்ஜாஸ் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அவற்றை கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x