Published : 28 Jan 2015 09:50 AM
Last Updated : 28 Jan 2015 09:50 AM

கோட்சேவுக்கு சிலை வைப்பதற்கான பணியை நிறுத்த கோரிய மனு தள்ளுபடி

மீரட்டில் கோட்சேவுக்கு சிலை வைப்பதற்காக நடக்கும் பணிகளை நிறுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுகுறித்து கண்ணன் கோவிந்தராஜூலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந் ததாவது: உத்தரபிரதேச மாநிலம், மீரட்டில் கோட்சேவுக்கு சிலை வைப்பதற்கான பணியை அகில இந்திய இந்து மகாசபா மேற்கொண்டு வருகிறது. கோட்சேவை தேச பக்தர் போல சித்தரிக்க திட்டமிடுகின்றனர். அவரது சிலையை டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கவும் திட்டமிட்டு வருகிறார்கள். மீரட்டில் பூமி பூஜை முடிந்து, வரும் 30-ம் தேதிமுதல் சிலை யை நிறுவுவதற்கான பணி தொடங்கவுள்ளது. இந்த விஷமத்தமான செயல் நாட்டை துண்டாக்கிவிடும். எனவே, மீரட்டில் கோட்சேவுக்கு சிலை வைப்பதற்காக மேற்கொள் ளப்படும் பணியை நிறுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதல் டிவிஷன் பெஞ்ச் இந்த மனுவை நேற்று விசாரித்தது. “மனுதாரின் மனு, சென்னை உயர் நீதிமன்ற அதிகார வரம்புக்குள் வரவில்லை. எனவே, மனுதாரர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்து தனது உரிமையை நிலைநாட்டிக் கொள்ளலாம்” என்று உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x