Published : 03 Jan 2015 12:11 PM
Last Updated : 03 Jan 2015 12:11 PM

டென்னிஸ்: அங்கீதா சாம்பியன்

புனேயில் நடைபெற்ற என்இசிசி-ஐடிஎப் மகளிர் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை அங்கீதா ரெய்னா சாம்பியன் பட்டம் வென்றார்.

21 வயதாகும் அங்கீதா பிரிட்டனின் இளம் வீராங்கனையான கேட்டி டியூனியை 6-2,6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பரிசுத் தொகையும் அங்கீதாவுக்கு கிடைத்துள்ளது. டென்னிஸ் தரவரிசையில் அங்கீதா 294-வது இடத்தில் உள்ளார். இந்தியா வீராங்கனை ஒருவர் இப்போட்டியில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் வெல்வது இதுவே முதல்முறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x