Published : 22 Dec 2014 07:36 PM
Last Updated : 22 Dec 2014 07:36 PM

பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தத்தில் புவனேஷ் குமாருக்கு ‘ஏ’ கிரேடு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலை அறிவித்துள்ளது. பி-கிரேடில் இருந்த புவனேஷ் குமார் ஏ-கிரேடுக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

இதன் மூலம் விராட் கோலி, ரெய்னா, தோனி, அஸ்வின் உள்ளிட்ட வீரர்களுடன் புவனேஷ் இணைந்துள்ளார்.

மொகமது ஷமி, அம்பாட்டி ராயுடு, அஜிங்கிய ரஹானே ஆகியோர் சி-கிரேடிலிருந்து பி-கிரேடுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். கவுதம் கம்பீர், யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக், ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

கடந்த ஆண்டில் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறாத வருண் ஆரோன், ஸ்டூவர்ட் பின்னி, பங்கஜ் சிங், தவல் குல்கர்னி, ரசூல், அக்சர் படேல், உத்தப்பா, மனோஜ் திவாரி, கரண் சர்மா, சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், லோகேஷ் ராகுல் ஆகிய வீரர்கள் சி-கிரேடிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

பிராக்யன் ஓஜா, இசாந்த் சர்மா, முரளி விஜய், ஷிகர் தவன், உமேஷ் யாதவ், புஜாரா, ரோஹித் சர்மா, ஆகியோர் பி-கிரேடில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

அமித் மிஸ்ரா, விருத்திமான் சஹா, வினய் குமார், மோகித் சர்மா ஆகியோர் சி-கிரேடில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

2015 உலகக் கோப்பை உத்தேச 30 வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ள மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா ஆகியோருக்கும் ஒப்பந்தத்தில் இடமில்லை.

விக்கெட் கீப்பர் நமன் ஓஜாவுக்கும் ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x