Last Updated : 09 Dec, 2014 03:35 PM

 

Published : 09 Dec 2014 03:35 PM
Last Updated : 09 Dec 2014 03:35 PM

பிலிப் ஹியூஸ் துயரத்திற்குப் பிறகு பந்துவீசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சான் அபாட்

பிலிப் ஹியூஸின் அகால மரணத்திற்குப் பிறகு பவுன்சர் வீசிய வேகப்பந்து வீச்சாளர் சான் அபாட் மீண்டும் கிரிக்கெட்டிற்குத் திரும்பி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பிலிப் ஹியூஸ் தலையில் அடிபட்டு கீழே விழுந்து கண்விழிக்காது போன அதே சிட்னி மைதானத்தில் குவீன்ஸ்லாந்து அணிக்கு எதிராக நியுசவுத்வேல்ஸ் அணி ஷெபீல்ட் ஷீல்ட் 4 நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது.

ஆட்டத்தின் 13-வது ஓவரை சான் அபாட் வீச வந்தார். டக் போலிஞ்சர் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தொடக்க ஓவர்களை வீசிய பிறகு வீச அழைக்கப்பட்டார் சான் அபாட். அவர் தன் முதல் ஓவரின் 5-வது பந்தில் பவுன்சர் வீசியதாக ஆஸ்திரேலிய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து ஷாட் பிட்ச் பந்துகளை வீச அவர் தயங்கவில்லை. முதல் விக்கெட்டாக நேதன் ரியர்டன் என்பவரை பவுல்டு செய்தார். பென் கட்டிங் விக்கெட்டையும் சான் அபாட் வீழ்த்தி 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குவீன்ஸ்லாந்து 268 ரன்களுக்குச் சுருண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x