Published : 14 Jul 2019 03:10 PM
Last Updated : 14 Jul 2019 03:10 PM
லண்டனில் நடந்துவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
12-வது உலகக்கோப்பைப் போட்டி இறுதி்க்கட்டத்தை எட்டியுள்ளது. லண்டன் லாட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து மோதுகிறது நியூஸிலாந்து அணி.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். அரையிறுதியில் இந்திய அணியுடன் விளையாடிய அதே அணிதான் மாற்றமில்லாமல் விளையாடுகிறது.
இங்கிலாந்து அணியிலும் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியாவுடன் விளையாடிய அதே அணி மாற்றமில்லாமல் விளையாடுகிறது.
லண்டனில் நேற்று இரவும், இன்று அதிகாலையிலும் மழை பெய்துள்ளதால், காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது, காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது. ஆதலால், முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு ரன் சேர்ப்பது சிறிது கடினமாகவும், விக்கெட்டை தக்கவைப்பதிலும் சிறிது சிரமம் ஏற்படும்.
அதேசமமயம், பந்துவீசும் இங்கிலாந்து வீரர்கள் காலை நேர குளிர்ச்சியையும், ஈரப்பதத்தையும் பயன்படுத்தி நன்றாகப் பந்துகளை ஸ்விங் செய்தால், நியூஸிலாந்தில் தொடக்க விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தி நெருக்கடியை அளித்துவிடலாம்.
ஆடுகளம் குறைந்தபட்சம் 10 ஓவர்கள் வரை பந்துவீச்சாளர்களுக்குத்தான் ஒத்துழைக்கும் என்பதால், விக்கெட்டை இழந்துவிடாமல் ஆடுவது அவசியம். ஆட்டம் மழை காரணமாக 15 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT