Published : 03 Jul 2019 09:37 PM
Last Updated : 03 Jul 2019 09:37 PM
நடப்பு உலகக்கோப்பை போட்டித் தொடரில் புறக்கணிக்கப்பட்ட விரக்தியில் அம்பதி ராயுடு அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து பலரும் ராயுடுவுக்கு வாழ்த்தும் ஆறுதலும் கூறி வருகின்றனர்.
கம்பீர் அணித்தேர்வாளர்களே காரணம் என்று தாக்குதல் தொடுக்க, சேவாக் நிச்சயம் வலிதரும் புறக்கணிப்புதான் என்று கூறியிருந்தனர்.
விராட் கோலி ஒருமுறை இந்திய அணியின் 4ம் நிலை உறுதியாகி விட்டது, அது அம்பாத்தி ராயுடுதான் என்று ஒரு பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்து அவரிடம் உலகக்கோப்பை ஆசையை வளர்த்து விட்டார்.
ஆனால் விஜய் சங்கர் என்று அவ்வளவாக சர்வதேச கிரிக்கெட்டுக்குத் தயாராகாதவரை ஆல்ரவுண்டர், 3டி பிளேயர் என்று கூறி தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத், ராயுடு நீக்கத்தை நியாயப்படுத்தினார்.
பிறகு ராயுடு விரக்தியில் ஒரு ட்வீட்டில் நான் உலகக்கோப்பையைப் பார்க்க 3டி கண்ணாடி வாங்கியுள்ளேன் என்று பிரசாத்தின் 3டி கருத்தை நையாண்டி செய்தார். பிறகு என்ன நினைத்தனரோ தெரியவில்லை ரிசர்வ் வீரராக அவரை தேர்வு செய்தனர், கடைசியில் ரிஷப் பந்த் வந்து, மயங் அகர்வால் வர ராயுடு முடிவெடுத்து விட்டார்.
இந்நிலையில் முதலில் தான் கொடுத்த வாக்குறுதியை கோலி நினைவில் கொண்டிருந்தாரா என்பது தெரியவில்லை, ராயுடு ஓய்வுக்கு அவருக்கு ஆறுதலாக ட்வீட் செய்துள்ளார்:
“விஷ் யு த பெஸ்ட் கோயிங் ஃபார்வர்ட் அம்பதி, யு ஆர் டாப் மேன் ராயுடு” என்று ட்வீட் செய்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT