Published : 06 Jul 2019 06:57 PM
Last Updated : 06 Jul 2019 06:57 PM
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷோயப் மாலிக் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்ததையடுத்து அவரது மனைவியும் இந்திய டென்னிஸ் நட்சத்திரமுமான சானியா மிர்ஸா ஷோயப் மாலிக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தன் வாழ்த்துச் செய்தியில் மகன் இஸான் மற்றும் தான் ஷோயப் மாலிக் சாதனைகளுக்காகப் பெருமைப் படுவதாகத் தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு கதைக்கும் ஒரு முடிவு உண்டு, ஆனால் வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கமே, ஷோயப் நீங்கள் உங்கள் நாட்டுக்காக பெருமையுடன் 20 ஆண்டுகள் விளையாடினீர்கள், தொடர்ந்து அதே கவுரவத்துடன் தொடர்ந்தீர்கள். இஸான் (மகன்), நான் உங்கள் சாதனைகளுக்காகப் பெருமைப்படுகிறோம். அதுமட்டுமல்ல நீங்கள் யார் என்பதற்காகவும். இன்னும் சில ஆயிரம் டி20 ரன்களுக்காகவும்.” என்று ஷோயப் மாலிக்கின் புகைப்படத்துடன் சானியா மிர்சா பதிவிட்டுள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான கடைசி போட்டியுடன் ஷோயப் மாலிக் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். 1999-ம் ஆண்டு முதல் போட்டியில் ஷார்ஜாவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆடிய ஷோயப் மாலிக், 287 போட்டிகளில் 7,534 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 34.55. இதில் 9 சதங்கள் எடுத்துள்ளார், இவர் டி20 கேப்டனாக இருந்த பொது 2007-ல் இறுதிப் போட்டி வரை வந்து இந்தியாவுடன் தோல்வி தழுவியது நினைவிருக்கலாம்.
சானியா மிர்சாவை 2010-ம் ஆண்டு திருமணம் புரிந்தார் ஷோயப் மாலிக். 2018-ல் குழந்தை பிறந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT