Published : 24 Jul 2017 01:35 PM
Last Updated : 24 Jul 2017 01:35 PM
மகளிர் உலகப் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு பகடி செய்த பியர்ஸ் மோர்கனை வழக்கம் போல் தனது ட்வீட்டால் வாயடைக்க செய்துள்ளார் விரேந்திர ஷேவாக்.
பிரிட்டன் பத்திரிகையாளரும், அறிவிப்பாளருமான பியர்ஸ் மோர்கன், கடத்த ஒலிம்பிக் போட்டி முதலே ட்விட்டரில் இந்தியாவை பகடி செய்து வந்தார். பியர்ஸ் மோர்கனின் இப்பதிவுகளுக்கு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக்கும் தனது ட்வீட் மூலம் பதிலடி அளித்து வந்தது அனைவரும் அறிந்த ஒன்று.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மகளிர் உலகப் கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதனைத் தொடர்ந்து மோர்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேவாக்கை குறிப்பிட்டு “நீங்கள் நலமாக உள்ளீர்களா நண்பா?” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ஷேவாக் தரப்பில் சில மணி நேரம் பதிலளிக்கப்படாமல் இருந்தது.
அதனைத் தொடர்ந்து மோர்கன் ஷேவாக்கை பகடி செய்யும் வகையில் மேலும் ஒரு பதிவை வெளியிட்டார்.
இறுதியில் ஷேவாக் ட்வீட் மூலம் மோர்கனுக்கு பதிலளித்தார்.
ஷேவாக் ட்விட்டர் பக்கத்தில், “இறுதி போட்டியில் இந்திய மகளிர் அணியின் இந்த தோல்வியை நினைத்து நான் உட்பட இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்கிறோம். நாங்கள் சிறப்பாகவே போராடினோம், முன்பை விட சிறந்த அணியாகவும், உறுதியான அணியாகவும் உருவாகியுள்ளோம். மாற்றத்துக்காக மகிழுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT