Published : 08 Jul 2017 10:31 AM
Last Updated : 08 Jul 2017 10:31 AM

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: 4-வது சுற்றில் அசரன்கா

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்றுக்கு பெலாரஸ் வீராங்கனை அசரன்கா தகுதி பெற்றுள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று போட்டியில் பெலாரஸ் வீராங்கனையான அசரன்கா, இங்கிலாந்தின் ஹீதர் வாட்சனை எதிர்த்து மோதினார். இப்போட்டியில் அசரங்கா முதல் செட்டை 3-6 என்ற புள்ளிக் கணக்கில் இழந்தார். இருப்பினும் அடுத்த 2 செட்களிலும் ஆக்ரோஷ மாக ஆடிய அவர் 6-1, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் அவற்றைக் கைப்பற்றினார். இதன் மூலம் 3-6, 6-1,6-4 என்ற நேர் செட்களில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி 5 நிமிடங்கள் நீடித்தது.

மகளிர் பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் பிரான்ஸ் வீராங்கனையான கரோலின் கார்சியா, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் மாடிசன் பிரெங்கிளை வீழ்த்தினார்.

நிஷிகோரி தோல்வி

ஆண்களுக்கான பிரிவில் நடந்த 3-வது சுற்றுப் போட்டியில் ஜப்பான் வீரர் நிஷிகோரி அதிர்ச்சி தோல்வியடைந்தார். 9-ம் நிலை வீரரான அவரை, 18-ம் நிலை வீரரான ஸ்பெயினின் படிஸ்டா அகுட், 6-4, 7-6 (7/3), 3-6, 6-3 என்ற செட்கணக்கில் போராடி வென்றார். 4-வது சுற்றுப் போட்டியில் மரின் சிலிக்கை எதிர்த்து ஆடுவார். முன்னதாக நேற்று நடந்த மற்றொரு போட்டியில் மரின் சிலிக் 6-4, 7-6, 6-4 என்ற செட்கணக்கில் ஸ்டீவ் ஜான்சனை வென்றார்.

மற்றொரு போட்டியில் 16-ம் நிலை வீரரான முல்லர் 7-6, 7-5, 6-4 என்ற செட்கணக்கில் பிடேனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x