Published : 16 Jul 2017 12:15 PM
Last Updated : 16 Jul 2017 12:15 PM
பாரா உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார், ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் சுந்தர் சிங் 60.36 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவை சேர்ந்த தேவேந்திரா இந்த தொடரில் கலந்து கொள்ளவில்லை.
பாராலிம்பிக்கில் தொழில்நுட்ப காரணங்களுக்காக சுந்தர் சிங் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த வேதனைக்கு மருந்தாக தற்போது பாரா உலக தடகள சாம்பியன்ஷிப்பில் முதலிடம் பிடித்துள்ளார். வெற்றி குறித்து சுந்தர் சிங் கூறும்போது, “ரியோ பாராலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன். அதன் பின்னர் என்னால் தீவிரமாக போட்டிக்கு தயார் ஆக முடியவில்லை. மனதளவில் மிகவும் உடைந்தேன். ஆனால் தற்போது உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு வலுவாக திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT