Last Updated : 26 Nov, 2014 10:38 AM

 

Published : 26 Nov 2014 10:38 AM
Last Updated : 26 Nov 2014 10:38 AM

மக்காவ் ஓபன்: வர்மா, பிரணீத் வெற்றி

மக்காவ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சவுரவ் வர்மா, சாய் பிரணீத் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

மக்காவ் நகரில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் சவுரவ் வர்மா 21-14, 21-15 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் யங் சியேவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் சாய் பிரணீத்தும், மலேசியாவின் ஊன் காக் ஹாங்கும் மோதினர். இந்த ஆட்டத்தில் பிரணீத் 11-5 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது ஊன் காக் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியதால், பிரணீத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் ஜெயராம் 15—21 11—21 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கஸுமாஸா சகாயிடமும், இந்தியாவின் அரவிந்த் பட் 15-21, 5-21 என்ற நேர் செட்களில் சீனாவின் ஷி யூகியிடமும் தோல்வி கண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x