Published : 21 Feb 2014 11:20 AM
Last Updated : 21 Feb 2014 11:20 AM

நாடு திரும்பியது இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நியூஸிலாந்தில் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.

நியூஸிலாந்து பயணத்தில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த இந்தியா ஒரு வெற்றியைக் கூட பெற முடியவில்லை. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 0-4 என்ற கணக்கிலும், 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 0-1 என்ற கணக்கிலும் இந்தியா இழந்தது.

மும்பை விமான நிலையத்தில் புதன்கிழமை இரவு வந்திறங்கிய இந்திய வீரர்கள், அங்கிருந்து தங்கள் சொந்த ஊருக்குச் சென்றனர்.

இந்திய அணி அடுத்ததாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வரும் 23-ம் தேதி வங்கதேசம் செல்ல இருக்கிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் 25-ம் தேதி தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x