Published : 08 Mar 2017 09:58 AM
Last Updated : 08 Mar 2017 09:58 AM
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் நடத்தும் ஆயில் நிறுவனங்களுக்கு இடையிலான 37-வது ஆண்டு டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்களில் இன்று தொடங்குகிறது.
போட்டிகள் வரும் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஓஎன்ஜிசி, பிபிசிஎல், எச்பிசிஎல், ஆயில், எஐஎல், கெயில், எம்ஆர்பிஎல், என்ஆர்எல், இந்தியன் ஆயில் உள்ளிட்ட 9 அணிகள் கலந்து கொள்கின்றன.
தனிநபர் மற்றும் அணிகள் பிரிவில் போட்டிகள் நடத்தப்படு கிறது. இந்த தொடரில் முன்னணி நட்சத்திரங்களான சரத் கமல், சவுமியா தீப் ராய், மனிகா பத்ரா, கிர்த்விகா சின்கா ராய், அமல் ராஜ், சத்யன், மதுரிகா பட்கர், சவுமியாஜித் கோஷ், ஹர்மீத் தேசாய், சுபாஜித் சாஹா, மவுமாதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT