Published : 02 Mar 2014 07:45 PM
Last Updated : 02 Mar 2014 07:45 PM

இங்கிலாந்தை வீழ்த்தியது மே.இ.தீவுகள்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது மேற்கிந்தியத் தீவுகள்.

மேற்கிந்தியத் தீவுகளின் நார்த் சவுன்ட் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டுவைன் பிராவோ 91 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் குவித்தார். டேரன் சமி 36 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 61, சிம்மன்ஸ் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் பிரெஸ்னன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் மைக்கேல் லம்ப் சதமடித்தபோதும் (106 ரன்கள்), மற்ற வீரர்கள் சொதப்பினர். 37-வது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த இங்கிலாந்து, பின்னர் சரிவுக்குள்ளாகி தோல்வி கண்டது. இதனால் அந்த அணியால் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் சுனில் நரேன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிராவோ ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது மே.இ.தீவுகள். 2-வது போட்டி நார்த் சவுன்டில் இன்று நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x