Published : 10 Dec 2013 10:05 AM
Last Updated : 10 Dec 2013 10:05 AM

4 மாத ஓய்வுக்குப்பின் களமிறங்கினார் ஷரபோவா

காயம் காரணமாக ஓய்வில் இருந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா மீண்டும் களமிறங்கினார்.

கொலம்பியாவின் போகோடா நகரில் நடைபெற்ற காட்சிப் போட்டியில் செர்பியாவின் அனா இவானோவிச்சிடம் 6-1,1-6,12-10 என்ற செட் கணக்கில் ஷரபோவா தோல்வியடைந்தார்.

தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஷரபோவா கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் காயமடைந்து வெளியேறினார்.

வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கடந்த 4 மாதங்களாக எந்த டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்நிலை யில் கொலம்பியாவில் நடைபெற்ற காட்சிப் போட்டியில் அவர் பங்கேற்றார்.

இது தொடர்பாக டுவிட்டர் இணையதளத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஷரபோவா, கொலம்பியா ரசிகர்கள் எனக்கு அளித்த வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. சுமார் 4 மாதங்களுக்குப் பின் இப்போது மீண்டும் களமிறங்கியுள்ளேன்.

இது மிகவும் நீண்ட இடைவெளிதான் என்றாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெறுவேன் என்று கூறியுள்ளார்.

அடுத்ததாக டிசம்பர் 30-ம் தேதி தொடங்க இருக்கும் பிரிஸ்பென் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஷரபோவா பங்கேற்க இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x