Published : 03 Jan 2016 12:27 PM
Last Updated : 03 Jan 2016 12:27 PM
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் 61-வது தேசிய அளவிலான 4 நாள் விளையாட்டுப் போட்டிகள் தருமபுரியில் நேற்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, பீகார், சண்டிகர், சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, கேரளா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 17 மாநிலங்கள் புதுச்சேரி, லட்சத் தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 361 மாணவ, மாணவியர் கலந்து கொண்டுள்ளனர். .
வளையப் பந்து (டென்னி காய்டு), பாட்மிண்டன் ஆகிய விளையாட்டுகளில் 17 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்கு உட்பட்டோர் என 2 பிரிவுகளில் இந்தப் போட்டிகள் நடைபெறுகிறது. 5-ம் தேதி மாலை வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT