Last Updated : 05 Jan, 2016 07:20 PM

 

Published : 05 Jan 2016 07:20 PM
Last Updated : 05 Jan 2016 07:20 PM

1009 ரன்கள் சாதனை கிரிக்கெட் மாணவருக்கு சச்சின், தோனி புகழாரம்

323 பந்துகளில் 1009 ரன்கள் எடுத்த மும்பை பள்ளியைச் சேர்ந்த 15-வயது பிரணவ் தனவாதேவுக்கு சச்சின் டெண்டுல்கர், தோனி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில், “முதன் முதலாக 1000 ரன்கள் மைல்கல்லை எட்டிய பிரணவுக்கு வாழ்த்துக்கள். இன்னும் புதிய சிகரங்களை எட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

1009 ரன்களை எடுத்து உலக சாதனை நிகழ்த்திய பிரணவ் தனவாதே நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஸ்கோர் 6 விக்கெட் இழப்புக்க்கு 1465 ரன்கள் என்று இருந்த போது டிக்ளேர் செய்யப்பட்டது.

அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோருக்கான 116 ஆண்டுகால சாதனையை உடைத்துள்ளார் பிரணவ்.

தோனி போலவே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனாக திகழும் பிரணவ், தனது லட்சிய ஆளுமை என்று தோனியைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தோனி இவரை வாழ்த்திக் கூறும்போது, “இவ்வளவு ரன்களை குவிப்பது என்பது அசாத்தியமானது. சில வேளைகளில் மிகவும் அரிதானது” என்று அதிசயித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x